நீராடச் சென்ற ஆறு வயது சிறுவன் பலி!!

372

Dead

வெல்லவாய – எத்திலிவெவ, தோரஆர வாவியில் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று நடந்துள்ளதாகவும், சிறுவன் தனது பாட்டி மற்றும் தங்கையுடன் வாவியில் குளிக்கச் சென்ற போதே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

நீராடச் சென்ற இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர், இந்த நிலையில் சிறுவர்களின் பாட்டி குறித்த சிறுவர்கள் இருவரையும் காப்பாற்றி வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில்அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.