ஹாலி எல திக்வெல்ல தோட்டத்தின் சேமநல உத்தியோகத்தராக கடைமையாற்றும் யோகேஸ்வரன் என்பவரது கோழிப் பண்ணையில் நேற்றைய தினம் கோழியொன்று 250 கிராம் நிறையுடைய விசித்திரமான முட்டை ஒன்றை இட்டுள்ளது.
இது பற்றி கோழிப்பண்னையின் உரிமையாளரான யோகேஸ்வரன் கூறுகையில்,
இப்படியான விசித்திரமான முட்டையொன்றை தனது கோழி இட்டதையிட்டு பெரும் ஆச்சரியமளிப்பதாகவும் சாதாரண முட்டையொன்றைவிட 200 கிராம் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.