நீக்கப்பட்ட சச்சின் தெண்டுல்கரின் சிற்பம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

679

Sachin

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆர்.பி.ஜி. கலை நிறுவனம் சார்பில் மும்பை மெரின் டிரைவில் சச்சின் தெண்டுல்கர் உருவம் பொறித்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்வெட்டு அமைக்கப்பட்டது.

இதற்கு பொதுமக்களும், சமூகநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சச்சின் தெண்டுல்கர் சிற்பத்தை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு ஆர்.பி.ஜி. கலை நிறுவனத்துக்கு மாநகராட்சி உத்தரவிட்டது.

இதன் பேரில், சிற்பத்தை அகற்றுவதற்கான பணியில் ஆர்.பி.ஜி. நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று சச்சின் தெண்டுல்கர் சிற்பம் அங்கிருந்து அகற்றப்பட்டது.