தனது மகளை கொலை செய்த தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு!!

535

1 (9)
தனது மகளை கொலை செய்த தாய்யொருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த மே மாதம் 31ஆம் திகதி அம்பாறை மத்திய முகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளார்.

தனது மகள் மதம் மாறியதன் காரணமாக ஏற்பட்ட வாய்தர்க்கத்தில் ஆத்திரமடைந்த தாய் கட்டில் பலகையால் தனது மகளை தாக்கியுள்ளார்.இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தனது மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் சந்தேக நபர் புதைத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கொலை வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இச்சம்பவத்தில் உயிரிழந்த 21 வயதான செல்வநாயகம் ஜனனி என்பவர் சந்தேக நபரின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது.