செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு ரயில் பாதையைக் கடந்த மாணவர் ரயிலில் மோதுண்டு பலி!!

742

????????????????????????????????????

கம்பஹாவில், செல்லிடப் பேசியில் பேசிக் கொண்டு ரயில் பாதையை கடந்த மாணவர் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.கம்பஹா பண்டாரநாயக்க மத்திய மஹா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 19 வயதான செனேத் ரொசான் என்ற மாணவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

கம்பஹா நகரில் அமைந்துள்ள ரயில் கடவை ஒன்றை மாணவர், செல்லிடப் பேசியில் உரையாடிக்கொண்டே கடந்துள்ளார்,இதன்போது கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதுண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவர் கொழும்பு கோட்டேயிலிருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் ரயிலைப் பார்த்துக் கொண்டு பாதையை கடந்தபோது அவரது பின்னால் கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் வருவதனை காணவில்லை.மாணவரின் சடலம் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.