16 வயதான மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியர் விளக்கமறியலில்!!

295

Abuse

பகுதி நேர வகுப்பில் 16 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பாடசாலை ஆசிரியர் ஒருவர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய நீதவான் ஜயருவான் திஸாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கிரிஹூல்ல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் ஆசிரியராக பணியாற்றி வந்த சந்தேக நபர் பன்னல பிரதேசத்தில் பகுதி நேர வகுப்பில் வைத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

வகுப்பில் இருந்த மாணவர்கள் இடையில் மாணவியை தெரிவு செய்த சந்தேக நபர் டொபி தருவதாக கூறி, அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த இடத்தில் இப்படியான சம்பவம் நடைபெறக் கூடும் என அந்த இடத்தை ஆய்வு செய்ததன் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக பீ. அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போதே பொலிஸார் இதனை கூறியுள்ளனர்.

மேலும், பன்னல பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.