இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு தற்கொலை செய்ய முயன்ற நபரை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.
வருண் மாலிக்(வயது 30) என்ற நபர் குர்கானில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று கை நரம்புகளை அறுத்த நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், எனது பெயர் வருண் மாலிக், எனது வாழ்வை முடித்துக் கொள்ள போகிறேன்.
இதற்கு யாரும் பொறுப்பு கிடையாது, எனக்கு யாரும் கிடையாது, தனிமையில் தவிக்கிறேன், இதற்கு வாழ்வை முடித்துக் கொள்வது தான் ஒரே வழி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஸ்டேட்டஸை பார்த்த நண்பர்கள் உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து சென்ற அதிகாரிகள், சுயநினைவில்லாமல் கிடந்த வருண் மாலிக்கை காப்பாற்றியதுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், தற்போது நலமாக உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தாயார் காலமானார், இதுவே இவரது மன உளைச்சலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.






