தலையில் அடித்து கொன்றது ஏன் : பரபரப்பு வாக்குமூலம் வழங்கிய கொலையாளி!!

761

Murder 1

கடலூர்மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.முட்லூர் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி, இவரது மனைவி அமுதா(வயது 46).

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர், மகன் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு அனுப்பும் பணத்தை வைத்து வட்டிக்கு விட்டு தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 29ம் திகதி அமுதா திடீரென மாயமானார்.
இதன்பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில், வெள்ளாற்றங்கரையில் அமுதாவை மர்ம மனிதர்களை கொன்று புதைத்தது தெரியவந்தது.

இதுதொடர்பான விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த மினிலாரி டிரைவர் வீரமணி, அவரது நண்பர் பிரேம்குமார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர், மேலும் வீரமணி அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் தேன்நிலவு என்ற பெண்ணை கடந்த5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு குழந்தை இல்லை.

எனது வீட்டின் அருகே அமுதா தனியாக வசித்து வந்தார். அவருக்கும் எனக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் எங்கள் 2 பேர் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

எனக்கும், அமுதாவிற்கும் தகராறு ஏற்படும் போது ‘குழந்தை பெற முடியாதவன்’ என்று என்னை மனம் நோகும்படி திட்டுவார்.

இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அவமானம் தாங்காமல் துடித்தேன். எனவே அமுதாவை தீர்த்துகட்ட வேண்டும் என முடிவு செய்தேன்.

இதுதொடர்பாக எனது நண்பர் பிரேம்குமாரிடம் கூறினேன். அவரும் அமுதாவை கொல்ல ஒப்புக்கொண்டார்.

கடந்த 29ம் திகதி இரவு அமுதா வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நானும், பிரேம் குமாரும் அங்கு சென்றோம்.
தூங்கிக் கொண்டிருந்த அமுதாவை தலையில் கோடரியால் ஓங்கி அடித்தேன். அவர் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. சிறிது நேரத்தில் அமுதா துடிதுடித்து இறந்தார்.

பின்னர் பிணத்தை வெள்ளாங்கரையில் புதைக்க நினைத்தேன். என்னுடைய மினி லொரியை அங்கு ஓட்டி வந்தேன். பின்னர் நானும், பிரேம் குமாரும் சேர்ந்து அமுதாவை தூக்கி சென்று மினி லொரியில் வைத்தோம்.

அதன்பின்னர்மினி லொரியை வெள்ளாற்றங்கரைக்கு ஓட்டிச்சென்றோம். அங்கு அமுதாவின் உடலை புதைத்து விட்டு தப்பிச் சென்றோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இருவரையும் பொலிசார் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், இவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.