பாடசாலை மாணவர்கள் இருவரைக் காணவில்லை!!

414

Missing

பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஸ்ரீநாக தேசிய பாடசாலையின் மாணவர்கள் இருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தரம் 9 மற்றும், தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



பாடசாலை விட்டு மாணவர்கள் வீடு திரும்பாததனால் இவர்களை பெற்றோர் தேடியுள்ளதுடன் இறுதியில் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் குறித்த மாணவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.