பெண்கள் நிர்வாணப் புகைப்படத்தைக் கொடுத்தால் கடன் வாங்கலாம் : அதிர்ச்சித் தகவல்!!

622

nude-photograp-should-be-given-for-loan-guarantees

இணையத்தின் மூலம் கடன் கொடுக்கும் நிறுவனங்கள், கடன் கேட்கும் பெண்களிடம் நிர்வாண போட்டோக்களை கேரண்டியாக கேட்கும் பகீர் தகவல் வெளியே தெரியவந்துள்ளது.இது இந்தியாவில் இல்லை. சீனாவில்தான், இணையத்தின் மூலம் கடன் கொடுக்கும் சில நிறுவனங்கள், பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை கேரண்டியாக கேட்கிறார்கள்.

இதுபற்றி ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இணையத்தில் கடன் கொடுக்கும் நிறுவனங்கள், பெண்களிடம், அவர்களின் நிர்வாண புகைப்படங்களுடன், அவர்களின் அடையாள அட்டையையும் வாங்கிக் கொள்கிறார்கள்.குறிப்பிட்ட நேரத்திர்குள் பணம் அல்லது வட்டியை செலுத்தவில்லை எனில் அவர்களின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனங்கள் மிரட்டுவதாகவும் கூறியுள்ளது.

அந்த நிறுவங்களிடம் கடன் வாங்கிய ஒரு பெண் தன்னுடைய அனுபவத்தை கூறும்போது, அவர் 500 யான் (76 அமெர்க்க டாலர்) கடன் வாங்கியிருந்தார் என்றும், அதற்கு வார வட்டியாக வாங்கிய தொகையில் 30 சதவீதம் செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.

மேலும், ஒரு பழைய கடனை அடைக்க, ஒரு புதிய லோன் வாங்கிய போது, அவரின் கடன் 55,000 யான் வரைக்கும் சென்று விட்டதாகவும், உடனே அந்த நிறுவனம், அவரின் நிர்வாண புகைப்படங்களை கேரண்டியாக கேட்டதாகவும் கூறியுள்ளார்.

இணையத்தின் மூலம், இப்படி ஆளைக் கொல்லும் வட்டிக்கு கடன் கொடுத்து, அதற்கு கேரண்டியாக பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை வாங்கும் நிறுவனங்களை பற்றிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.