கிளிநொச்சியில் பதினைந்து வயதுச்சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : இளைஞர் விளக்கமறியலில்!!

459

Anbuse

கிளிநொச்சிப்பகுதியில் பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கி கர்ப்பமாக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் 29ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் உள்ள பதினைந்து வயதுடைய சிறுமி ஒருவரை கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பமடைய வைத்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து நேற்று முன்தினம்பிற்பகல் குறித்த விடுதியை சென்று பார்வையிட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் நேற்று முன்தினம் (14.06.2016) இரவு ஒருவரைக் கைது செய்து நேற்றைய தினம் (15.06.2016) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களின் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை நேற்றைய தினம் (15.06.2016) மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரியுடன் நீதிவான் அறையில் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

குறித்த சிறுமியை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர் உட்பட மூன்று பேர் அச்சுறுத்தி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகவும் இவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே குறித்த சிறுமி முன்னர் பொலிசில் முறைப்பாட்டை செய்யத் தயங்கியதாகவும் தெரியவருகின்றது.