தனது தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த ஒன்றரை மாதமே ஆன குழந்தை ஒன்றுமூச்சுத் திணறி பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சிலாபம் – கரவிட்டிகாரய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து குழந்தையை சிலாபம் வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் முன்பே குழந்தை இறந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, குழந்தையின் பிரேத பரிசோதனைகள் இன்று சிலாபம் வைத்தியசாலையில்இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.