கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் கொலை!!

671

Killed

மெதிரிகிரிய, மீகஸ்வெவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மெதிரிகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.