சபரிமலைக்கு ஆண் வேடமிட்டு வந்த இளம் பெண் : திறமையாக பிடித்த பாதுகாவலர்கள்!!

591

Sabarimalai

கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் ஆண் வேடமிட்டு நுழைய முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் கோவில் பாதுகாவலர்கள் திறமையாக பெண்னை கண்டறிந்து பொலிஸ் உதவியுடன் பிடித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்களை தவிர பெண்கள் யாரும் செல்லக்கூடாது என்பது பாரம்பரிய மரபு. இந்நிலையில் நேற்று நீளக்காட்சட்டை, சட்டை அணிந்து சந்தேகிக்கும் வகையில் ஒருவர் கோவிலுக்கு வந்துள்ளார்.

அந்த நபரின் நடவடிக்கைகள் சந்தேகமாக இருந்ததால் பாதுகாவலர்கள் அவரை ரகசியமாக பின் தொடர்ந்துள்ளனர். பம்பையில் இருந்து அவர் சபரிமலைக்குள் நுழையும்போது, பாதுகாவலர்கள் பொலிஸ் உதவியுடன் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அப்போது, அந்த நபர் ஆண் இல்லை என்பதும், இளவயது பெண் எனவும், கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக மொட்டை அடித்து ஆண் வேடம் தரித்து கோவிலுக்கு வந்ததும் தெரியவந்துள்ளது

பொலிஸ் நடத்திய விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகா என்ற லெட்சுமி எனவும், 18 வயது ஆனவர் எனவும் தெரியவந்துள்ளது.

பின்னர், கோவில் பாதுகாவலர்கள் அந்த பெண்ணுக்கு அறிவுரைகள் கூறி கோவிலின் நடைமுறைகளை எடுத்துரைத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

Sabari