கர்நாடகாவில் சிறுவன் ஒருவன் மழை வேண்டி கிராம மக்களுடன் சேர்ந்து நிர்வாணமாக ஊர்வலம் சென்று சிறப்பு பூஜை செய்துள்ள வீடியோ வைரலாகி உள்ளது.
வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த ஜூன் 10ம் திகதி குறித்த சிறப்பு பூஜை நடந்துள்ளது.
குறித்த வீடியோவில், மழை வேண்டி கிராம மக்கள் கடவுளுக்கு பூஜை செய்து, சிறுவனை நிர்வாணமாக ஊர் முழுவதும் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.
பின்னர், சிறுவனுக்கு புதிய ஆடைகள் வழங்கப்படுகிறது, சம்பவத்தை குறித்து கிராமவாசிகள் கூறியதாவது, மழை வேண்டி ஊர் மக்கள் ஒன்றாக கூடி செய்யும் சடங்கிற்காக கிராமத்தில் உள்ள ஒரு இளம்வயது பையன் தேர்வு செய்யப்படுவது கிராமத்தின் வழக்கம் என தெரிவித்துள்ளனர்.






