தொடர்ந்து 250 மணித்தியாலங்கள் ஒலிபரப்பு : சாதனையை ஆரம்பித்த ஈழத் தமிழர்!!

849

Suresh

250 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்யும் சாதனை முயற்சியை புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழரான சுரேஸ் யோகிம் ஆரம்பித்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா நேரப்படி மாலை 4.30 மணிக்கு சாதனை முயற்சியை ஆரம்பித்துள்ளார்.

250 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்யும் முயற்சியை ஆரம்பித்துள்ள சுரேஸ் யோகிம் யாழ்ப்பாணம் அச்சுவேலியை சொந்த இடமாகவும் வவுனியாவை பிறப்பிடமாகவும் கொண்டவராவார்.

இவர் இலங்கையில் 1996 ஆம் ஆண்டு 1000 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடந்து சாதனை படைத்திருந்தார். இது மாத்திரமின்றி இவர் 5 கண்டங்களில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

தற்போது 250 மணித்தியாலங்கள் ஒலிபரப்பு செய்யும் சாதனை முயற்சியை தொடங்கியுள்ள சுரேஸ் யோகிம் எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 5 மணிக்கு தனது சாதனையை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் 197 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்ததே இதுவரை சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.