
மஹியங்கனை குடாலுனுக பனுல்ல காட்டுப்பகுதியிலிருந்து 9 வயதான பாடசாலை மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரான யல்வெல பகுதியை சேர்ந்த ஒன்பது வயதான மலினி சந்தமாலி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், அச்சம் கொண்ட பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.இதனையடுத்து பொலிஸாரும், கிராமவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சிறுமி காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





