உடலில் புகுந்த பேயை விரட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த குடும்பம்!!

266

terror-hand
ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளனர்.

ஜேர்மனியில் Hesse என்ற நகரில் அவர்கள் வசித்து வந்தபோது, அவர்களில் 41 வயதான பெண் ஒருவரின் நடவடிக்கை திடீரென வினோதமாக மாறியுள்ளது. தனியாக பேசுவது, சாலையில் செல்பவர்கள் மீது திடீரென பாய்ந்து தாக்குவது, காற்றில் கைகளை அசைத்தவாறு சிரிப்பது போன்ற நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பெண்ணின் உடலுக்குள் பேய் நுழைந்துள்ளதாக பாதிரியார் ஒருவர் தெரிவித்ததால், அதனை உண்மை என எண்ணி பேயை முயற்சியில் குடும்பத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 5ம் திகதி Frankfurt நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு, 41 வயதான பெண் திடீரென வித்தியாசமாக செயல்பட்டுள்ளார். குடும்பத்தினர் ஐவரும் பெண்ணை இழுத்துச் சென்று கட்டிலில் கட்டியுள்ளனர்.பின்னர், உடலில் இருந்து பேய் வெளியேறுவதற்காக அவரது மார்ப்பில் பலமாக தொடர்ந்து தாக்கியுள்ளனர். பெண் வலியால் துடித்து அலறியுள்ளார்.

பெண்ணின் அலறலை நிறுத்த ஒருவர் அவரது வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். இவ்வாறு சுமார் 2 மணி நேரமாக தாக்கியதில் அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் மகனான 15 வயது சிறுவன் உள்பட அனைவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.இந்நிலையில், ஐவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றம் தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீது அதிகாரப்பூர்வமாக கொலை குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.