முல்லைத்தீவு மாவட்டத்தின்புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில் மோட்டார் சைக்கில் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பேருந்து எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
பலியானவர் தொடர்பான விபரம் இதுவரையில் தெரியவில்லை விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.