கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று துபாய் நோக்கி செல்ல வந்த அவர், அலுவலக அதிகாரிகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அங்கிருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளார்.
இதேவேளை சந்தேகநபர் காயமடைந்திருந்தமையால், அவரை பொலிஸார் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.






