இலங்கைச் சிறுவர்கள் உட்பட 67 சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த 53 வயது நபர்!!

1873

Abuse

இலங்கை உள்ளிட்ட பலநாடுகளை சேர்ந்த சிறுவர்களை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பிரான்ஸ் நாட்டு பொதுமகன் ஒருவருக்கு எதிராக அந்த நாட்டில் வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

53 வயதான அவர் 67 இளம் சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இலங்கை, எகிப்து மற்றும் டியூனிசியாவை சேர்ந்தவர்கள் என பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

மனிதாபிமான பணிகளில் ஈடுபடுவதாக கூறியே இவர் இந்த செயலில் ஈடுப்பட்டுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த பிரான்ஸ் நாட்டவருக்கு எதிரான விசாரணைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

அவர் இணையத்தினுடாக இளம் வயதினருடன் தொடர்புகளை மேற்கொண்டு குறித்த நாடுகளுக்கு செல்லும் போது துஸ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரான்ஸ் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.