நஷ்டஈடு கோரும் நிதி அமைச்சர்!!

619

Ravi

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடி ஒளிப்பரப்பில் ரவி கருணாநாயக்கவிற்குஎதிராக அவதூறாக உரையாற்றியதன் காரணமாக இழப்பீடு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் பியல் நிசாந்தவுக்கு நிதி அமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் 2 பில்லியன் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 7ம் திகதி இடம் பெற்ற நேரடி தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில்கலந்து கொண்டு நிதி அமைச்சருக்கு எதிராக அவதூறான அறிக்கை ஒன்றை தாக்கல்செய்தமையினாலேயே இவர் மீது குற்றம்சுமத்தப்பபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவரினுடைய இந்த அறிக்கையின் காரணமாக அரசியல்வாதியான நிதி அமைச்சரின் புகழ்சேதமடைந்திருப்பதாகவும், இதற்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-