உலக கராத்தே சம்பியன் போட்டியில் ஈழச் சிறுமி சாதனை!!

657

625.0.560.320.160.600.053.800.668.160.90
அனைத்து வயதினருக்குமான ஆறாவது உலக கராத்தே சம்பியன் போட்டியானது அயர்லாந்து நாட்டில் நேற்று (19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் புலம் பெயர்ந்து வாழும் சிவகுமார் அனுசா தம்பதிகளின் புதல்வி செல்வி அகல்யா பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அகல்யா சிறு வயதிலிருந்தே கராத்தே கலையில் ஆர்வமுடன் செயற்பட்டுவரும் அவர் தாயகத்திலும் தற்பொழுது பிரித்தானியா லண்டனிலும் பலபோட்டிகளில் பங்குபற்றி பல பதக்கங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.