வீட்டின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி!!

271

1 (72)

அம்பாறை – பொத்துவில் – ஹிதயாபுரம் பிரதேசத்தில் வீடொன்றின் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று மதியம் இடம் பெற்றதாக ஹிதயாபுர பொலிஸார் கூறினார்.

இந்த வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்துசிறுவனின் மீது விழுந்தமையினால் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சுவர் மீது தொடர்ச்சியாக சிறுவன் ஏறி விளையாடிக்கொண்டு இருந்தமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.