52 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மேயர்!!

580

2

ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் நகரத்தின் மேயர் 52 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ராஜஸ்தானில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது, இதில் பரத்பூர் மேயராக திகழ்ந்து வரும் சிவ சிங்(வயது-52) 44.83 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுகுறித்து சிவசிங் கூறுயதாவது, மேயராக இருந்து தினமும் காலை, மாலை இரண்டு மணி நேரம் கடினமாக படித்தேன், 1971-72ம் ஆண்டு சொந்த பிரச்சனை காரணமாக பள்ளி படிப்பை நிறுத்தினேன்.

ஆனால், அனைவருக்கும் கல்வி மிக முக்கியம் என பின்னர் உணர்ந்தேன், சமீபத்தில் வெளிநாடு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் என்னால் அங்கு ஆங்கிலத்தில் பேச முடியவில்லை, அதை மிக மோசமாக உணர்ந்தேன்.

மற்றொரு காரணம் புதிய சட்டத்தின் படி தேர்தலில் போட்டியிட அடிப்படை தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது, எனினும் தேர்தலில் போட்டியிட இது ஒரு உதவியாக இருக்கும் என கருதுகிறேன்.

மேலும் தேர்வில் நான் தோல்வியடைந்திருந்தால் மீண்டும் முயற்சி செய்திருப்பேன், தற்போது மேற்படிப்பை தொடர விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த 78 வயதான ஷிவ் சரண் யாதவ், நம்பிக்கை தளராமல் 47வது முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியடைந்துள்ளார்.

1