மஹியங்கனை பிரதேசத்தில் 9 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 33 வயதான 2 பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பில் மேலும் அதிர்ச்சிகர தகவலொன்று வெளியாகியுள்ளது.
குறித்த நபர் சுமார் 15 வருடங்களின் முன்னர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் தண்டனை அனுபவித்தவர் என தெரியவந்துள்ளது. அதன்போதும் பாடசாலை மாணவியொருவரே துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.