முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகனவிபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வட்டுவாகல் பாலத்தில் உழவு இயந்திரம் ஒன்றை, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கடந்து செல்ல முயற்சித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் மோட்டர் சைக்கிளில் வந்த நபர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.