பேருந்து சில்லில் சிக்குண்டு இளைஞர் பரிதாபமாகப் பலி!!

760

Dead-body

மாத்தளை – நாவுல, A 9 வீதியில் சென்ற பேருந்திலிருந்து வெளியில் குதிக்க முற்பட்ட இளைஞன் பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து நேற்று (20.06) இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

கலேவெல, அலுத்வேவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து யாத்திரைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே இடம்பெற்றுள்ளதாகவும், பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.