முள்ளியவளை 4ம் வட்டாரத்தில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (20.06.2016) வேள்ட் விசன் அனுசரனையுடன் வெண்மலர் விளையாட்டு கழக இளைஞர்களினால் பொது நோக்கு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் திரு.பவான், கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் வேள்ட் விசன் ஊழியர்கள், வெண்மலர் விளையாட்டு கழக உறுப்பினர்கள், பெருந்தொகையான முதியோர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
















