அம்பாறை தமன-கலாஹேன மலையடி பாலத்தின் கீழ், கார் ஒன்று ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த விபத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தினை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும் தமன பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவர்கள் எம்.எல்.பாருக் மற்றும் மொஹமட் இஸ்மாயில் ரிஸ்வி என்ற வர்த்தகர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







