தப்பியோடிய 4500 படையினர் சட்டபூர்வமாக விலகல்!!

957

????????????????????????????????????

முப்படைகளிலும் இருந்து தப்பியோடிய சுமார் 4500 பேர் சட்டபூர்வமாக படைகளில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட காலப்பகுதியிலே இவர்கள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 13ம் திகதி தொடக்கம், அடுத்தமாதம் 13ம் திகதி வரை இந்தப் பொதுமன்னிப்புக் காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இராணுவத்தில் இருந்து 25 ஆயிரம் பேரும், கடற்படையில் இருந்து 7,137 பேரும், விமானப்படையில் இருந்து 510 பேரும், தப்பியோடியுள்ளனர்.இந்தநிலையில், பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், 4,269 இராணுவத்தினரும், 211கடற்படையினரும், 165 விமானப்படையினரும், தாமாக முன்வந்து படையில் இருந்து முறையாக விலகியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முறையான அனுமதியின்றி 90 நாட்களுக்கு மேல் விடுமுறையில் இருக்கும் படையினர் அனைவரும் தப்பியோடியவர்களாக கருதப்பட்டு, இவர்களை மீளப் படையில் சேர்த்துக் கொள்வதற்கு அல்லது முறையாக படையில் இருந்து விலகிக் கொள்வதற்கான பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.