ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் கோவிலில் அற்புதம், நம்பினால் நம்புங்கள்!!(காணொளி)

933

Kovil

நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்க அனல் பறக்கும் தணலில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றும் இளைஞர்களும், கலையேறி தனது நாக்கினை வாளால் வெட்டி இரத்தம் காணும் பக்த நிகழ்வும் ஆனைக்கோட்டையில் நடைபெற்றுள்ளது.

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே மயிர் கூச்செறியும் மேற்படி பக்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மேற்படி ஆலயம் ஈழத்தில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தோடு கொடியேறி தொடர்ந்து பதினைந்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழமை.

இந்த திருவிழா நாட்களில் தீர்த்த திருவிழா அன்று ஆலயத்தின் முன்புறத்தில் இளைஞர்கள் தீ மூட்டி தமது நேத்திக்கடனை செலுத்தியுள்ளனர்.

எரியும் தணலில் எந்த தயக்கமும் இன்றி தீ மிதித்தல் நிகழ்வை மேற்கொண்டு, நமது நேத்திக்கடன்களை நிறைவேற்றி உள்ளனர்.

இதில் ஒருவருக்கு கலை வந்து தான் வைத்திருந்த வாளால் தனது நாக்கினை வெட்டி, வாளின் மீது ஏறியது அனைத்து பகதர்களையும் பக்தியின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. இந்த அற்புத நிகழ்வால் குறித்த ஆலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பகதர்கள் சென்று வருகின்றனர்.

குறித்த ஆலயத்தில் அருள் பாலித்துள்ள அம்மன் சக்தி வாய்ந்தவள் எனவும், அவளால் இயலாதது எதுவும் இல்லை எனவும், தாம் வேண்டுபவற்றை அவள் தருகின்றாள் எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.