ஒலிம்பிக் தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட்டு வந்த சிறுத்தை பலி!!

1147

puli siruththai

பிரேசில் மனவ்ஸ் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள சிறுத்தை ஒன்றைஒலிம்பிக் தீபம் ஏற்றும் பந்தயத்திற்கு பயன்படுத்தி வந்த சம்பவம் ஒன்றுஇடம் பெற்றுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.சம்பவத்தில் பெண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிஉயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தயத்தில் ஈடுப்பட்ட சிறுத்தை,நிகழ்வின் போது சிப்பாய் ஒருவரைதாக்கிவிட்டுச் சென்றதாலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஊடகப் பேச்சாளர்ஒருவர் தெரிவித்துள்ளார்.சிறுத்தையை தடுக்க பல முறை முயன்ற போதும், அது பலனளிக்கவில்லை என்றகாரணத்தினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சிப்பாய் ஒருவர்தெரிவித்துள்ளார்.

சங்கிலியால் கட்டிவைத்து ஒலிம்பிக் தீபம் ஏற்ற வைத்தது பெறும் தவறு என ரியோவிளையாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஒலிம்பிக் நிகழ்வுகளிற்கு ஏன் விலங்குகளை பயன்படுத்தி வருகின்றீர்கள் என பலகேள்விகளை விலங்கு உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.