வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

506

 
வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பொது மக்களால் தாக்கப்பட்டதை கண்டித்து வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் இன்று (22.06.2016) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா கலாபோகஸ்வெவ என்ற பிரதேசத்தில் வைத்து கடந்த 16 ஆம் திகதி சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பிரதேச செயலக சந்தியிலிருந்து பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றினை கையளித்தனர்.

1 DSC_0556 DSC_0561 DSC_0564 DSC_0565 DSC_0566 DSC_0568 DSC_0570 DSC_0571 DSC_0572 DSC_0573