கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்ற ஈழத்துச் சிறுவன்!!

656

13465963_10157183565860637_470112622586774192_n

ஈழத்தைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர், 2016 ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் வல்வையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் அயர்லாந்தில் (டப்ளின்) 15ம் திகதி முதல் 19ம் திகதி வரை நடைபெற்ற கராத்தே உலக சம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.

இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன் இந்த ஆண்டுக்கான உலக சம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

2014ல் போலந்து நாட்டில் நடந்த சம்பியன்ஷிப்பில் இவர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். 2015ல் பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் இவர் kumite விளையாட்டில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

13494754_10157183566795637_8959494036792949533_n 13507087_10157183567050637_7285759289551184295_n