500 கோடி மாத சம்பளம் பெறும் இந்திய நபர்!!

286

Nikesh-arora

ஜப்பான் நாட்டு நிறுவனமான சாப்ட்பேங்கின் தலைவராக ஆக நிகேஷ் அரோரா கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்தியாவில் பிறந்தவரான இவர் இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் பணிபுரிந்தார். கடந்த நிதி ஆண்டில் இவர் 73 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பளமாக பெற்றார். இது இந்திய மதிப்பில் 500 கோடி ரூபாய் ஆகும்.

இதன் மூலம் உலக அளவில் அதிக சம்பளம் பெறும் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

தற்போது சாப்ட்பேங்கின் சி.இ.ஓ. ஆக இருக்கும் நிறுவனர் மாசாயோஷி சானுக்கு பிறகு, அந்த இடத்திற்கு நிகேஷ் அரோரா நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட போவது இல்லை என்று சாப்ட்பேங்க் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த நிகேஷ் அரோரா சாப்ட்பேங்கின் தலைவர் மற்றும் சி.ஓ.ஓ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.