யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வியாபார கற்கைகள் ஆய்வு மாநாடொன்றினை எதிர்வரும் வெள்ளிகிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
யதார்த்த உலகிற்கான வியாபர சவால்களுக்கான ஆய்வு ரீதியான தீர்வுகள் எனும் தலைப்பில் மனிதவள முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், பொருளியல் மற்றும் நிதியியல், பொது முகாமை என்ற நான்கு பிரிவுகளில் விடய ஆய்வுகள் இடம்பெறவுள்ளது.
இதற்கான பதிவுகளை www.vau.jfn.ac\lk\fbs\rcbs என்ற இணையத்தள முகவரியினூகவோ அன்றேல் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுயா வளாகத்திலோ பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஏ. புஸ்பநாதன் மற்றும் ஏனைய விரிவுரையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.