வவுனியாவில் பொலிஸ் வாகனம் மோதி இருவர் படுகாயம்!!

275

 
வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இன்று (23.06.2016) சற்றுமுன் பொலிஸ் வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலிருந்து மரக்காரம்பளை வீதிக்கு திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கில் மீது இன்று (23.06.2016) இரவு 7 மணியளவில் குளுமாட்டுச்சந்தியில் காத்தான் கோட்டத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பொலிஸ் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞன், யுவதி இருவரும் படுகாயமடைந்துள்ளனார்.

சம்பவ இடத்திலிருந்து பொலிஸாரின் வாகனம் எடுத்துச் செல்லப்பட்டு வேப்பங்குளத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் மறைந்து வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இடம்பெற்று 1 மணி நேரம் கடந்த நிலையிலும் இது வரை போக்குவரத்துப் பொலிசார் சமூகமளிக்கவில்லை.

1 DSC_0097 DSC_0098 DSC_0099 DSC_0100 DSC_0101 DSC_0102 DSC_0103 DSC_0104 DSC_0105 DSC_0107 DSC_0108 DSC_0109 DSC_0110 DSC_0111