முகமூடி நபரால் திரையரங்கில் துப்பாக்கி சூடு : 50 பேர் படுகாயம் : ஜேர்மனியில் பதற்றம்!!

299

VIERNHEIM, GERMANY - JUNE 23: Heavily-armed police stand outside a movie theatre where an armed man has reportedly opened fire on June 23, 2016 in Viernheim, Germany. According to initial media reports, the man entered the cinema today at approximately 3pm, fired a shot in the air and barricaded himself inside. (Photo by Alexander Scheuber/Getty Images)

ஜேர்மனி திரையரங்கு ஒன்றில் முகமூடி அணிந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாகி சூட்டில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை பொலிஸார் சுட்டு கொலை செய்துள்ளனர். இதனால் இப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள கினெபோலிஸ் திரையரங்கு கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த நபர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாகி சூடு நடத்திய நபர் கையில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.

தற்போது திரையரங்கு முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.