பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஹட்டன் – சிங்கிமலை பகுதியிலுள்ள சுரங்கப் பாதையில் வைத்தே, இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இதன்போது காயமடைந்தவர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த பெண் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த பகுதியில் வைத்து இதற்கு முன்னதாகவும் இவ்வாறான கல் வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், இது குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.
இதுஇவ்வாறு இருக்க கல்வீச்சில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.