ரஜினிக்கு கெடு வைத்த விவசாயிகள்!!

237

Rajani

கடந்த 2002 அக்டோபர் 13ம் திகதி காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ரஜினி உண்ணாவிரதம் இருந்தார்.

பின், கவர்னரை சந்தித்து மனு அளித்த ரஜினி, நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என அறிவித்தார்.

அறிவித்து, 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் கூட அவர் இதுவரை அந்த நிதியை, மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ அளிக்கவில்லை.

இப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் நதிநீர் இணைப்பு விஷயத்தில் முனைப்பாக செயல்படுகின்றனர். எனவே, ரஜினி அறிவித்தபடி ஒரு கோடி ரூபாய் நிதியை உடனடியாக அளிக்க கோரி, அவரது வீட்டில் மனு கொடுத்துள்ளோம்.

ஒரு மாதத்துக்குள் கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம் என தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.