பிரபாகரனை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டாரா?

986

Veerappan

இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வனப்பகுதிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து கோலோச்சிய வீரப்பன் கொல்லப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் வீரப்பனின் மரணத்தில் பல மர்மங்கள் தொடர்கதையாகவே உள்ளன.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறியே வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கசிந்துள்ள தகவல் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.

வீரப்பனைப் பிடிப்பதற்கான Operation Cocoon செயற்றிட்டத்தின் உயரதிகாரியாக செயற்பட்ட முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான விஜய்குமார் IPS இனால் எழுதப்படும் வீரப்பன் தொடர்பிலான புத்தகம் பல மர்மங்களை வெளியுலகிற்குப் புலப்படுத்தும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கண் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாக அம்புலன்ஸ் வண்டியில் வீரப்பன் ஏற்றப்பட்டது ஒரு காரணம் எனினும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மேல் கொண்ட ஈர்ப்பும் அவரை சந்திப்பதற்கான ஆவலுமே வீரப்பன் தானாக ”ஆப்ரேஷன் குக்கூன்” இல் சிக்கியமைக்கான பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

-News First-