வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களம் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எஸ். பி.திசானாயக்க தலைமையில் வன்னி மாவட்ட முன்னேற்ற மிளாய்வுக் கூட்டம் நேற்று (23.06.2016) காலை10 மணிக்கு வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் வவுனியா, மன்னார், மல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயளாலர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள செயலாளர், அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை வங்கி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.













