வவுனியா குடியிருப்பிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியின் வயல்வெளி அருகே உள்ள பாலம் ஒன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒரு இன்று காலை (24.06.2016) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் தண்ணீரில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாகவும் அருகில் சைக்கிள் ஒரு காணப்படுவதாகவும் சம்பவ இடத்திலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலைமை காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.













