வவுனியாவில் முதலமைச்சருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!!

263

CV

வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு முதலமைச்சர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கோரியே இவ் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வவுனியா றோயல் கார்டின் மண்டபத்தில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவனியா வர்த்தகர் சங்கம், வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், வவுனியா முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வரியிறுப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.

இதன் காரணாமாக எதிர்வரும் திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் ஈடுபடவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டதுடன் மேலும் பல அமைப்புகளின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது.

13535640_1825980237630920_488837482_n