வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் சற்று முன் தீ விபத்தொன்று ஏற்ப்பட்டுள்ளது.
வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் இன்று (24.06.2016) சற்றுமுன் மின்ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
உடனடியாக செயற்ப்பட்ட வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மின் இணைப்பினைத் துண்டித்து தீ அணைப்புக் கருவியின் மூலம் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொருட்சேதம் எதுவும் இடம்பெறவில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.




















