சென்னையில் ஒரே நாளில் 6 பெண்கள் படுகொலை : அச்சத்தில் மக்கள்!!

1068

Murder

தமிழக தலைநகரமான சென்னையில் 24 மணி நேரத்தில் 6 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னராசு. இவருக்கு பவித்ரா (18), பரிமளா (19) மற்றும் சினேகா(19) என 3 மகள்கள். சின்னராசுவின் முதல் மனைவி இறந்துவிட்டதால் சந்தன வீனா (36) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் இவர்கள் அனைவரும் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்று சென்னைக்கு திரும்பியுள்ளனர். கடந்த திங்கள் கிழமை முதல் இவர்களது வீடு மூடியே இருந்துள்ளது.

மேலும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்ற பொலிசார் இன்று காலை வீட்டை சோதனை செய்தபோது, வீட்டிற்குள் 4 பேரும் நிர்வாணமாக கிடந்துள்ளனர்.

குடும்பத்தலைவரான சின்னராசு தலைமறைவாகியுள்ளார். எனினும், அவரை தேடி கண்டுபிடித்து விசாரணை செய்த போது அவர் தான் இக்கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மனைவியின் நடத்தை சரியில்லாததால் இக்கொலைகளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதே தினத்தில் சென்னை முகப்பேரில் ஒரு பெண்ணும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி துறையில் பணியாற்றும் ஒரு பெண்ணும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 6 கொலைகள் நடந்துள்ளது சென்னைவாசிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.