யாழில் மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலி : விளக்கமறியலில் அதிபர், 2 ஆசிரியர்கள்!!

595

Aarpaattam

யாழ். நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவியுடன் துர்நடத்தையில் ஈடுபட முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரையும், சம்பவத்தை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் மற்றொரு ஆசிரியரையும் எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவியின் முறைப்பாட்டை அதிபருக்கு தெரியப்படுத்தியபோதும், அதனைப் பொலிஸாருக்கு அறிவிக்காத குற்றச்சாட்டில் மற்றொரு ஆசிரியை விசாரணையில் உள்ளார் என்று யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரானிஸ்லஸ் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுவலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தியிருந்தனர். ஆசிரியர்கள் மற்றும் அதிபர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவர் அந்தப் பாடசாலை அதிபருக்கு முறைப்பாடு செய்தபோதும், அதுபற்றி பொலிஸாருக்கு ஏன் அறிவித்திருக்கவில்லை என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னரே அந்த ஆசிரியை விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் யாழ். பிராந்திய மூத்தபொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இதேபோன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் தென்மராட்சி வலயப் பாடசாலை ஒன்றைச்சேர்ந்த ஆசிரியர் மற்றும் சம்பவங்களை மறைத்த குற்றச்சாட்டில் அதிபர், உப அதிபர் மற்றும் 2 ஆசிரியைகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.