வவுனியாவில் பட்டப்பகலில் வாள்வெட்டுச் சம்பவம்!!

620

 
வவுனியா புகையிரத நிலைய வீதியில் நேற்று (24.06.2016) பிற்பகல் வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்தில் பணிபுரியும் நால்வர் மீது நேற்று (24.06.2016) பிற்பகல் முச்சக்கரவண்டியில் வந்தவர் வாளால் வெட்டிவிட்டு முச்சக்கரவண்டியினை அவ்விடத்திலேயே விட்டு தப்பிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

SAM_0124 SAM_0132 SAM_0133 SAM_0137 SAM_0141