பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை 2016ம்ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இறுதிக்கட்டப் போரின்போது பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து கஸ்ரப்படும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் பெரியகுளம், தெற்கிலுப்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு சிறு வியாபார முயற்சிக்கான ஊக்குவிப்பிற்காகவும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களது அலுவலகத்தில் வைத்து தொழில்த்துறைத் திணைக்களத்தின் உதவியுடன் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதன்போது மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவுடன் வவுனியா மாவட்ட தொழில்த்துறைத் திணைக்கள உயர் அதிகாரிகளும் அலுவல உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.









































